Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வில்வ மரத்தடியில் தியானம் செய்வதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா...?

வில்வ மரத்தடியில் தியானம் செய்வதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா...?
, திங்கள், 24 ஜனவரி 2022 (11:37 IST)
வீடுகளிலும் வில்வ மரம் வளர்க்கலாம். வீட்டில் வில்வ மரம் வளர்த்தால் அஸ்வ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.


108 சிவாலயங்களை தரிசனம் செய்த பலனும், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும். வில்வ மரம் வளர்ப்பவர்களை ஏழரை சனி நெருங்காது. வில்வ மரத்தை தினமும் பூஜித்தால் செல்வம் பெருகும். கடன் தொல்லைகள் மறையும்.

வெள்ளிக்கிழமைகளில் வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து லட்சுமி துதி சொல்லி நைவேத்தியம் படைத்து வழிபட்டால் அளவிட முடியாத அளவுக்கு அற்புதங்கள் நடக்கும். வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.

வில்வ மரத்தை பார்த்தும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். மருத்துவ ரீதியாகவும் நிறைய பலன்களை வில்வம் தருகிறது.

தினமும் வில்வ மரத்தடியில் தியானம் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஊளைச் சதை குறையும். வில்வ இலை பொடியை சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும். பல் வலி நீங்கும்.

சளி, இருமல், சைனசுக்கு வில்வ இலை பொடி சிறந்த மருந்தாகும். கொழுப்பு கட்டுப்படும். ரத்த அழுத்த பிரச்சினை தீரும். சர்க்கரை நோய் குணமாகும். அல்சர் பிரச்சினை வரவே வராது. ஜீரணக்கோளாறுகள் சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். இதனால் தோல் சம்பந்தபட்ட எந்த வியாதியும் வராது. இன்னும் ஏராளமான மருத்துவ பலன் தரும். வில்வ தளத்தை பறிக்கும் போது பயபக்தியுடன் பறிக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!