ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு ; கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (16:46 IST)
திருப்பூர் அருகே, தனியார் கல்லூரி வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர்.

 
திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே செயல்பட்டு வருகிறது, கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் தினந்தோறும் மாணவர்கள் திருச்சியிலிருந்து கல்லூரி வரை பயணிக்கின்றனர்.
 
இன்றும் வழக்கம் போல கல்லூரி மாணவர்களை குன்னத்தூர் என்ற பகுதியில் ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டு இருக்கும் போது, கூலிபாளையம் என்ற பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 20க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர்.
 
இந்த விபத்து குறித்து விசாரித்த போலீஸார், பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு எற்பட்டதால் தான் விபத்து நேர்ந்தது என கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments