இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி மரணத்திற்கு காத்திருக்கும் பெண்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (04:05 IST)
கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் தான் இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 

 
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்லுக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசி (வயது 55). ரோசியின் பெற்றோருக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ரோசி 5ஆவது மகள் ஆவார். கடைசியாக தம்பி பிறந்துள்ளார்.
 
மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் ரோசி மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார். உறவினர் யாரும் இல்லாததால், அவரது இறப்பிற்கு பிறகு, யார் உடலை அடக்கம் செய்வது என்று அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பியதை அடுத்து ரோசி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
 
இதனால், ரோசி தான் கூலி வேலைக்கு சென்று, அதில் வரும் வருமானத்தை வைத்து, சிறிய அளவில் நிலம் ஒன்று வாங்கி வீடு ஒன்று கட்டிக்கொண்டுள்ளார்.
 
மேலும், தன் வீடு அருகே ஒரு கல்லறை கட்டி அதன் மீது சிலுவை குறியையும், அதன் அருகே தனது உருவ படத்தையும் வரைந்து வைத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments