Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் 4 மண்டலங்களில் 1,000த்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Webdunia
சனி, 23 மே 2020 (12:13 IST)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்.
 
நேற்று தமிழகத்தில் 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,191ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 743 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 557 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது. 
 
கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3,791 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,461 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1,300, திரு.வி.க நகரில் 1,079, தேனாம்பேட்டையில் 1,000, தண்டையார்பேட்டையில் 881, அண்ணா நகரில் 783 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments