Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை: வாலிபர்கள் கைது

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை: வாலிபர்கள் கைது

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (20:33 IST)
திருச்சியில் மாணவர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்து வந்த 4 பேரை தனிப்படை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


 

 
 
இவர்கள் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அந்த கும்பலை பிடிக்க அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
 
போலிசாருக்கு அந்த கும்பலின் போன் நம்பர் கிடைத்ததையடுத்து அவர்களை மாணவர்கள் அழைப்பது போல் அழைத்து போதை பொருள் கேட்டனர். இதனையடுத்து திருச்சி வந்த அந்த கும்பலை போலிசார் அரியமங்கலம் லட்சுமிபுரம் அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.
 
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த சந்திரமோகன், நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த சந்திர குமார், திருச்செங்கோட்டை சேர்ந்த திருவேங்கடம், முரளிதரன். இவர்களிடம் இருந்து 2 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
 
கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிசார் சிறையில் அடைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments