Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை: வாலிபர்கள் கைது

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை: வாலிபர்கள் கைது

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (20:33 IST)
திருச்சியில் மாணவர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்து வந்த 4 பேரை தனிப்படை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


 

 
 
இவர்கள் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அந்த கும்பலை பிடிக்க அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
 
போலிசாருக்கு அந்த கும்பலின் போன் நம்பர் கிடைத்ததையடுத்து அவர்களை மாணவர்கள் அழைப்பது போல் அழைத்து போதை பொருள் கேட்டனர். இதனையடுத்து திருச்சி வந்த அந்த கும்பலை போலிசார் அரியமங்கலம் லட்சுமிபுரம் அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.
 
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த சந்திரமோகன், நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த சந்திர குமார், திருச்செங்கோட்டை சேர்ந்த திருவேங்கடம், முரளிதரன். இவர்களிடம் இருந்து 2 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
 
கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிசார் சிறையில் அடைத்தனர்.

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments