Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பரபரப்பு: சீமான் நடத்திய பேரணியில் இளைஞர் தீக்குளிப்பு!

சென்னையில் பரபரப்பு: சீமான் நடத்திய பேரணியில் இளைஞர் தீக்குளிப்பு!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (15:54 IST)
காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று சென்னையில் கண்டன பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த பேரணியில் இயக்குனர் அமீர், சேரன், ரவி மரியா மற்றும் நாம் தமிழர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
 
சென்னை எழும்பூரில் ஆரம்பித்த இந்த பேரணி புதுப்பேட்டை அருகே வந்த போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
உடனடியாக அந்த இளைஞரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அவர் ஒரு சில தீக்காயங்களுடன் தப்பித்தார். இன்று மாலை பொதுக்கூட்டத்துடன் அமைதியான முறையில் நிறைவடைய இருந்த கண்டன பேரணியில் இளைஞர் தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments