Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியுடன் சின்ன சண்டை: வடபழனி மால் 3வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் பலி

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (07:21 IST)
சென்னை வடபழனியில் உள்ள மால் ஒன்றின் 3வது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



 
 
வேலூரை சேர்ந்த யுவராஜ் என்பவர் நேற்று தனது காதலியுடன் சென்னை வடபழனியில் உள்ள மால் ஒன்றுக்கு சென்றார். அங்குள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே சின்ன சண்டை வந்துள்ளது. இதனால் திடீரென மூட் அவுட் ஆன யுவராஜ் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார். 
 
இதுகுறித்து யுவராஜின் காதலியிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். யுவராஜ் காதலி கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. மாலின் சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ள போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments