Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோட்டா சாப்பிட்டு படுத்த இளைஞர் உயிரிழப்பு...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (19:04 IST)
புதுச்சேரி மாநிலத்தில் பரோட்டா சாப்பிட்டு படுத்த இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்துள்ள சுல்தான்பேட்டையில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இங்கு விதவிதமான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றனர். இதை விரும்பி, ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர்.

சில கடைகளில் சுகாதாரமின்றி சமைக்கப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில்,. புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஆரியப்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த செல்வராசுவின் கனன் சத்யமூர்த்தி(33). இவர், சென்னையிலுள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

கொரொனா ஊரடங்குக் காலத்தில் இருந்தே வீட்டில் இருந்தே அவர் பணியாற்றிக் கொண்டிருந்ததால் நேற்று மாலை தன் மனைவியுடன் சுல்தான்பேட்டையிலுள்ள ஒரு கடைக்குச் சென்று பரோட்டாவும், பிரைட் ரைஸும் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து தூங்கினார், விடியற்காலையில், அவர் பேச்சு மூச்சின்றி இருப்பதைப் பார்த்து, குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதுபற்றி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரது இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

வழக்கம் போல ஸ்டிக்கரை தூக்காதீங்க ஸ்டாலின்.. பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து ஈபிஎஸ்

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நமது ஏவுகணைகள் எதிரி நாட்டில் விழும்போது ‘பாரத் மாதா கி ஜே’ என்று சத்தம் கேட்கும்! - பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments