Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில், உலக புத்தக கண்காட்சி: அமைச்சர் கே.என். நேரு தகவல்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (13:58 IST)
சென்னையில் அடுத்த ஆண்டு உலகப் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்தார்
 
சேலத்தில் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் கேஎன் நேரு அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை சந்தித்து சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
 
மேலும் 100 கோடி மதிப்புள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவர் உருவாக்கினார். தற்போது முதலமைச்சராக இருக்கும் மு க ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் போது அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார். சேலத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி நவம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர் கற்றுக்கொள்கிறேன்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments