Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 பக்க கடிதம், வீடியோ... புகுந்த வீட்டு கொடுமையால் பெண் தற்கொலை

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (16:13 IST)
சென்னை ஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த கொடுமை தாங்க முடியாமல் பெண் 8 பக்க கடிதம் மற்றும் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது. இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
தற்கொலை செய்து கொள்ளும் முன் 8 பக்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து அதனை அவரது குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். 
 
காவல்துறையினர் கடிதம் மற்றும் வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடித்தத்தில் ஆனந்தி, என் தற்கொலை முடிவுக்கு காரணமாக இருந்த என் மாமியார், மாமனார் மற்றும் என் கணவர் ஆகியோரை சட்டத்துக்கு முன் நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
புகுந்த வீட்டில் மகிழ்ச்சி இல்லாத காரணத்தால் தற்கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments