Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்வையற்ற இளம்பெண் கற்பழித்துக் கொலை - வண்டலூரில் அதிர்ச்சி

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (13:22 IST)
சென்னைக்கு அடுத்துள்ள வண்டலூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் கற்பழித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வண்டலூர் ரயில் நிலையம் பகுதியில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி(25). இவர் அந்த பகுதியில் குப்பை தொட்டிகளில் உள்ள பொருட்களை சேகரித்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
 
இந்நிலையில், நேற்று காலை வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் விஜயலட்சுமி ஆடை இல்லாமல் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்தார்.  இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் மரணமடைந்தார். 
 
முதல் கட்ட விசாரணையில் அவரது பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் யாரோ குத்தியுள்ளனர்.எனவே, மர்ம நபர்கள் அவரை கற்பழித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அவரது கணவருடன் அவர் சாலையில் தூங்கியபோது, மதுபோதையில் வந்த ஒருவர் கத்தியை காட்டி அவரை இழுத்து சென்று கற்பழித்து கொலை செய்து விட்டதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments