Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக வேட்பாளர் திமுகவுக்கு தாவலா? – ஈரோடு கிழக்கில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (10:08 IST)
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக வேட்பாளர் திமுகவுக்கு தாவ போவதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த இடைத்தேர்தலை தனித்து நின்று போட்டியிடுவதாக அறிவித்த தேமுதிக வேட்பாளராக ஆனந்த் என்பவரை அறிவித்தது.

ஆனால் அவர் திமுகவுக்கு தாவப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேமுதிக வேட்பாளர் ஆனந்த், பெரிய கட்சிகளே வேட்பாளரை அறிவிக்க தயங்கும் நிலையில் தேமுதிக வேட்பாளரை அறிவித்துள்ளதாகவும், தான் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாகவும், தனது பெயரை கெடுக்க இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments