Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் அணியில் இணைகிறாரா பண்ருட்டி ராமச்சந்திரன்?

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (14:43 IST)
எம்ஜிஆரின் வலது கையாக இருந்தவர், ஜெயலலிதா காலத்திலும் சக்தி வாய்ந்த நபராக விளங்கியவர், பின்னர் விஜயகாந்தின் தேமுதிகவில் அவைத்தலைவராக இருந்தவர், மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் என்ற பெருமைக்குரியவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.



 
 
முதுபெரும் அரசியல் தலைவராக உள்ள இவர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே உள்ளார். குறிப்பாக அதிமுக இரண்டு, மூன்று அணிகளாக பிரிந்ததில் அவர் மிகுந்த வருத்தம் அடைந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்
 
இந்த நிலையில் இன்று பண்ருட்டி ராமச்சந்திரன் தினகரனை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் தினகரன் அணியில் இணைவார் என்றும் அவருக்கு கெளரவமான பதவி கொடுக்க தினகரன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தினகரன் அணியில் பண்ருட்டியார் இணைந்தால் அந்த அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments