Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு செல்வது ஏன்?

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (07:41 IST)
விவரம் தெரிந்த நாள் முதல் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் இணைய விருப்பமில்லை என்றுதான் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார். ஆனால் அதிமுகவில் தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதாலும், அதிமுகவில் இணைய ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் வேறு வழியின்றி திமுகவில் இணைய அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது
 
அதிமுகவில் இணைய தங்க தமிழ்ச்செல்வன், முதல்வர் ஈபிஎஸ் இடம் சில கோரிக்கைகள் வைத்தாராம். அதில் ஒன்று ராஜ்யசபா எம்பி பதவி. ஆனால் அவரது கோரிக்கைகளில் பாதியை மட்டுமே ஈபிஎஸ் டிக் செய்துள்ளார். அதில் ராஜ்யசபா எம்பி பதவி இல்லை. மேலும் தங்க தமிழ்ச்செல்வனை எந்த காரணத்தை முன்னிட்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்பதும் ஓபிஎஸ் தீவிரமாக இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணையும் முடிவை கைவிட்டதாக தெரிகிறது.
 
மேலும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய தயக்கம் தெரிவித்ததற்கு இன்னொரு காரணம், திமுகவில் இணைந்தால் அமமுக போலவே சொந்த காசைத்தான் செலவு செய்ய வேண்டும். கட்சியின் மூலம் எந்த நிதியும் வராது, வருமானமும் இருக்காது என்றும் கூறப்பட்டது. ஆனால் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளில் ஒன்றில் சேர்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால் வேறு வழியின்றி அவர் திமுகவில் இணையவுள்ளார்.
 
இன்று சட்டப்பேரவை கூடியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சில நிமிடங்களில் அவை ஒத்தி வைக்கப்படும். அதன்பின் அறிவாலயம் வரும் மு.க.ஸ்டாலின் முன் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையவுள்ளார் என்பதே இப்போதைய தங்க தமிழ்ச்செல்வனின் நிலையாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments