Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீலா ராஜேஷுக்குப் பதில் தலைமை செயலாளர் ஏன் ? இதுதான் காரணமாம்!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:14 IST)
தமிழகத்தில் கொரோனா பற்றிய புள்ளி விவரங்களை ஒவ்வொரு நாள் மாலை 6 மணிக்கும் அறிவித்து வந்த பீலா ராஜேஷ் இப்போது ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்த போது நோயாளிகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனித்து வந்தார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் ஓரங்கட்டப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முன்னிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அவருக்குப் பதில் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து அவரிடமே பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘சுகாதார துறை செயலர் என்ற வகையில் அவர் துறை சார்ந்த அனைத்து அதிகாரங்களும் அவரிடம் உள்ளன. தலைமைச் செயலாளர் என்பதால் அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும் நான் கவனித்து வருகிறேன். அவரால் அனைத்துத்துறை சார்ந்த தகவல்களையும் சொல்ல முடியாது என்பதால்  நான் பேட்டியளிக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments