Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது ஏன்? ஆணையர் விளக்கம்

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (11:05 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதற்கான விளக்கத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு இருப்பதாகவோ அல்லது இருப்பதாக சந்தேகிப்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவோ அறியப்படும் நபர்கள் மற்றும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்படும் வீடுகளில் தமிழக அரசின் சார்பில் ‘தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் கொரோனா போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சில மணி நேரங்களில் அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ”கமல்ஹாசனிடம் பணி புரியும் ஒருவர் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்ததால் அவரது வீட்டில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. ஆனால் தற்போது அவர் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் வசிப்பதில்லை என்பது தெரியாததால் அங்கு ஒட்டப்பட்டுள்ளது. பிறகு நீக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற சிறிய தவறுகள் மீண்டும் நடக்காமல் கவனமாக கையாளப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

மகனுக்கு பார்த்த பெண்ணுடன் காதல்.. மாமனாருடன் ஓடிய மருமகள்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments