Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏன் நடக்கிறது ? - லதா ரஜினிகாந்த் கேள்வி

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (21:06 IST)
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் குழந்தைகள் நல பாதுகாப்பிற்காக தயா பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்திவருகிறார். இந்த அமைப்பு சார்பில் இன்று கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் கலந்து கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
 
அவர் கூறியதாவது :
 
குழந்தைகளுக்கான அமைதி என்ற அமைப்பை குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவே ஏற்படுத்தியுள்ளோம்.தற்போது இதனை ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு சென்றுகொண்டிருக்கிறோம்.
 
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் இந்த அமைப்பை தொடங்க இருக்க்கிறோம். அதற்காக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்தான் இன்று நடைபெற்றது.
 
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது. அதனா குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு வர வேண்டும்,குழந்தைகளைப் பாதுகாப்பது நமது சமூகக் கடமை.குழந்தகளுல்லு நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. சமுதாயம் ஒன்றாக இணைந்தால் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
 
நிறைய சைல்ட் லைன் இருந்தாலும் தவறுகள் நடந்துவருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தைகளுகு எதிரான குற்றங்கள் நடக்கும் போது உடனடியாக கூறினால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், தவறுகள் குறையும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments