ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ முதல்வராக்கியது யார் ? ஜெயலலிதாவா? சசிகலாவா? அதிமுகவின் வெடித்தது சர்ச்சை

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:48 IST)
இன்று அதிமுக செயற்குழுபின் துணைமுதல்வர் ஓபிஎஸ், முதல்வர் இபிஎஸ் ஆகிய இருவரிடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகிறது.

அதில், செயற்குழுபின் துணைமுதல்வர் ஓபிஎஸ் என்னை முதல்வராக்கியது ஜெயலலிதா என்றும், உங்களை முதல்வராக்கியது சசிகலா என்று பேசியதாகவும் ,இதற்குப் பதிலடி கொடுத்த இபிஎஸ் நம் இருவரையும் முதல்வராக்கியது சசிகலா என்று பதிலடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

மேலும் ஓபிஎஸ் அடுத்து முதல்வராக விரும்புவதாகவும் ஆனால் அதற்கு இபிஎஸ் முட்டிக்கட்டை போடுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி சர்ச்சை வெடித்துள்ளது.

செயற்குழு கூட்டத்திற்குப் பின், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் அக்டோபர் 7ம் தேதி  யார் முதல்வர் வேட்பாளார் என்பதை அறிவிப்பார்கள் என்று  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments