Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் சி.எம். ஆக வந்தாலும் இந்த கையெழுத்தை போட வைப்பேன்: கமல்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (07:07 IST)
சென்னை மயிலாப்பூரில் பெண் தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கமல்ஹாசன், நடிகர் பார்த்திபன் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் கூறினார்.
 
முதலமைச்சர் ஆன பின்னர் உங்களுடைய முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்று நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்,`தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது.  நான் முதல்வராக ஆனால் மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில் என் முதல் கையெழுத்து போடுவேன்' என்று கூறினார். மேலும் வேறு யார் முதல்வராக வந்தாலும் இந்த கையெழுத்தை போட வைப்பேன், நான் முதல்வரானால் எனது முதல் கையெழுத்து இதுதான் என்று கூறினார்.
 
முன்னதாக கமல் பேசியபோது, '`மக்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதால் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியல் என்னும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். குறிப்பாக அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கமல் கேட்டு கொனார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments