Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் பாலியல் புகார் அளிக்க தனி வாட்ஸ் அப் எண்: புகார்கள் குவிந்து வருவதாக தகவல்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:57 IST)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்ததை அடுத்து வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் பாதிக்கப்பட்டு இருந்தால் தாராளமாக புகார் கொடுக்க முன்வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி அவர்களின் வாட்ஸ்அப் எண் 94447-72222 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருந்தால் தாராளமாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த எண் அறிவிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆசிரியர்கள் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரம் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்