Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் பிரச்சனையில் அரிவாள் வெட்டு:சென்னையில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (17:15 IST)
சென்னை அனகாபுத்தூரில் தண்ணீர் சண்டையில், ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டிய செய்தி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் தற்போது தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது.
முக்கியமாக சென்னை புறநகர் பகுதிகளில் பல நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர்.

மேலும் சென்னையில் பல பகுதிகளில் மக்கள், தண்ணிர் விநியோகம் இல்லாததால் காலி குடங்களுடன் தெருவில் இறங்கி சாலை மறியலில் ஈடுபடும் செய்திகள் ஆங்காங்கே வெளிவருகிறது.

இதன் உச்சக்கட்டமாக, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டும், பல பன்னாட்டு கம்பெனிகளில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சென்னை அனகாப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமரேஷன் நகரில் ,குடிநீர் விநியோகத்தின் போது ஏற்பட்ட சண்டையில், சுபாஷினி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலையை செய்த சபாநாயகரின் கார் ஓட்டுநர் ஆதிமூல ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் தண்ணீருக்காக பல சண்டைகள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், தற்போது இந்த சம்பவம் சென்னை அனகாப்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments