விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு! என்ன நடக்குது தேர்தல் கமிஷன்?

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (08:30 IST)
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்தே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கதிகலங்கியது. எப்படியாவது விஷாலை போட்டியில் இருந்து விலக்கி விட வேண்டும் என்பதில் இருகட்சிகளும் ஒன்றிணைந்தது.

விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது திமுகவும், அதிமுகவும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இரு கட்சிகளின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.

இந்த நிலையில் முதலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்ததாக கூறிய தேர்தல் அதிகாரி பின்னர் அவரது வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்தார். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் நேற்றிரவு விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஷால் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து விஷால் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் முறையிட முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments