Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு..!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு..!

Siva

, ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (07:44 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் போர்மேன் சுரேஷ்குமார் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவருக்கு போலீசார் வலைவீசியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வரும் நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சித்தறியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.
 
இந்த விபத்தில் கட்டிடத்தில் 5 அறைகள் தரைமட்டமாகியதாகவும், அங்கு பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் சிலர்  படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்து குறித்து வெம்பகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

28 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகி போட்டி.. மும்பையில் இன்று தொடக்கம்..!