Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (14:30 IST)
இன்று ஒரே நாளில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்ந்துள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று என்றும் 5 மாநில தேர்தலுக்குப் பின்னரும் இந்த விலை உயர்வு இருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது 
 
அதன்படி 137 நாட்களுக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது
 
இந்த விலை ஏற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்ந்து வரும் நேரத்தில் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக அதன் விலையை மேலும் உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments