Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை காலதாமதம்: தமிழக ஆளுநருக்கு விஜயகாந்த் கண்டனம்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (08:45 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.
 
இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட தமிழக எதிர் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், 7 பேர் விடுதலையை காலதாமதம் செய்த தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததோடு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார். 
 
மேலும் கூறிய அவர்,  இந்த விவகாரம் குறித்து ஆளுநர் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் அவரின் இந்த முடிவு வேதனை அளிக்கிறது. எனவே காலதாமதம் இன்றி 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments