Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணிக்கு செல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை..

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (13:55 IST)
வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள், தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு அந்த கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி தமிழக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இன்றுடன் இந்த போராட்டம் 5 ஆவது நாளாக தொடர்கிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களது போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டெங்கு சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை தவிற மற்ற பிரிவுகள் அனைத்திலும் சேவை தடை செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் போராட்டத்தை தற்போது தள்ளிவைத்துள்ளாதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்லாத அரசு மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments