234 தொகுதி மாணவ மாணவிகளை சந்திக்கும் விஜய்.. ஊக்கத்தொகை வழங்க முடிவு..!

Webdunia
வியாழன், 25 மே 2023 (12:53 IST)
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 1500 மாணவ மாணவிகளை நடிகர் விஜய் ஜூன் இரண்டாம் வாரத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
அதேபோல் பெற்றோரை இழந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாகவும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களின் அடுத்த கட்ட படிப்பிற்கு தேவையான ஊக்க தொகையை அவர் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மாணவ மாணவிகளுடனான சந்திப்பு குறித்த இடம், தேதி ஆகியவை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments