Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது அதிர்ச்சியில் இறந்த அதிகாரி

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (08:53 IST)
தீபாவளி மாமூல் என்ற பெயரில் தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை கோடிக்கணக்கில் கணக்கில் வராத ரொக்கம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தையும், ஆவணங்களையும் அதிக அளவில் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தபோது, மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு என்பவருக்குக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் மாரடைப்பு போல் நடிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கருதியதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்ட பாபு மரணம் அடைந்தார். மரணம் அடைந்த பாபுவிடம் இருந்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments