Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை அறிவிக்கும் முன்னரே வேலூர் வேட்பாளரை அறிவித்த திமுக மாவட்ட செயலாளர்.. பெரும் பரபரப்பு..!

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (14:54 IST)
திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை வெளிப்படுத்துவதற்கு முன்னரே மாவட்ட செயலாளர் ஒருவர் வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் தான் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில் வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் என்பவர் பேசிய போது வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் தான் என்றும் இது தலைவரே என்னிடம் சொன்னார் என்றும் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே கதிர் ஆனந்துக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட செயலாளரின் இந்த முந்திரிக்கொட்டைத்தன  பேச்சால் துரைமுருகன் மற்றும் அவரது வட்டாரங்கள் கடுப்பாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
துரைமுருகனிடம் தன்னுடைய விசுவாசத்தை காட்டுவதற்கு இப்படியா பேச வேண்டும்? தலைமை அதிகாரபூர்வமாக வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே இவர் எப்படி வேட்பாளர் அறிவிக்கலாம் என்று கூறி வருகின்றனர். இதனை அடுத்து அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 அடிக்கு திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தூங்கி கொண்டிருந்த நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments