Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி ரூ.120; காய்கறிகள் விலை 10 முதல் 15% உயர்வு!!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (10:41 IST)
மழை காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை 10 முதல் 15% உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
தக்காளி ஒரு கிலோ ரூ.80 - ரூ.100 ஆக நேற்று இருந்த நிலையில் இன்று ரூ,120 ஆக உயர்ந்துள்ளது. இதே போல ஒரு கிலோ வெங்காயம் ரூ.40, கத்தரிக்காய் ரூ.60. வெண்டைக்காய் ரூ.60, பீன்ஸ் ரூ.45, அவரைக்காய் ரூ.60, கேரட் ரூ.55, பீட்ரூட் ரூ.40, செளசெள ரூ.25, நூக்கல் ரூ.50, முட்டைகோஸ் ரூ.20, உருளைகிழங்கு ரூ.25 ஆக உள்ளது. 
 
இந்த விலை அனைத்தும் நேற்றையை விலையை விட 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments