Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கத்தியால் வெட்டிய விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (15:17 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் கள்ளக் காதல் விவகாரத்தில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர செயலாளராக இருப்பவர் தேஸ்கோ என்ற தெய்வசிகாமணி. இவர் இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். இவருக்கு பெண் ஒருவருடன் கள்ளக்காதல் தொடர்பு இருந்துள்ளது.
 
சமீபத்தில் அந்த பெண் தேஸ்கோவை விட்டு வேறொருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை தெரிந்துக்கொண்ட தேஸ்கோ அந்த பெண்ணை எச்சரித்துள்ளார். ஆனால் அந்த பெண் கண்டுக்கொள்ளவில்லை. 
 
இதனால் ஆத்திரமடைந்த தேஸ்கோ இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பெண்ணை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதையடுத்து தேஸ்கோ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார். ஆனால் கொலை முயற்சிக்கு பதில் வழிபறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments