Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருண் காந்தியை கைவிட்ட பாஜக.. காங்கிரஸ் அழைப்பு விடுப்பதாக தகவல்..!

Mahendran
வியாழன், 28 மார்ச் 2024 (14:02 IST)
வருண் காந்தியின் அம்மா மேனகா காந்திக்கு  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த பாஜக, வருண் காந்திக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஆனால் வருண் காந்தியிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில் மீண்டும் போட்டியிட வருண் காந்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் போட்டியிட்ட பிலிபித் என்ற தொகுதியில் அவருக்கு பதிலாக வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது போல் தனது தாய்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்றும் அதனால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடலாம் என்று வருண் காந்தி திட்டமிட்ட நிலையில் , அவரது தாய் மேனகா காந்திக்கு வாய்ப்பளித்ததன் மூலம் வருண் காந்தி தற்போது அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வருண் காந்திக்கு காங்கிரஸ் தலைப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் காங்கிரஸ் சென்றால் மேனகா காந்திக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படும் என்பதால் அவர் மௌனம் காப்பதாகவும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments