ஒருநாள் மழைக்கே அஸ்தமித்த தலைநகரம், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? வானதி சீனிவாசன்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (14:51 IST)
ஒரு நாள் மழைக்கே தலைநகரம் சென்னை அஸ்தமித்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து உள்ள நிலையில் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி 
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனி அடுத்த மழைக்கு தண்ணீர் தேங்காத அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டது. 
 
ஆனால் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பல இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கோவை தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இது குறித்து கூறிய போது ’ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள், நீரில் மூழ்கிய வாகனங்கள், அஸ்தமித்த தலைநகரம் ஆகியவைகளை பார்க்க முடிகிறது .இரண்டு ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? விடியல் ஆட்சி என பெருமை பேசும் முதல்வர் இதற்கு பதில் சொல்வாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் தாக்கியதில் ஈரானில் 40 மாணவிகள் உயிரிழப்பு!..

விஜயை நம்பி வந்த பொண்ணு!.. சில சனியன் சகடை வாழ்க்கையில் வந்தாங்க!.. விஜயின் மேனேஜர் பேட்டி!...

அஜித்திடம் இருக்கும் ஒரு குவாலிட்டி விஜயிடம் உண்டா!.. பெலிக்ஸை பொளக்கும் நெட்டிசன்கள்!..

தவெக கதை முடிஞ்சிப் போச்சி!.. திமுக 200 தொகுதிகளில் வெற்றி!.. தமீமுன் அன்சாரி பேட்டி...

அரசியல்வாதிங்களும் மனுஷங்கதான்!.. விஜய் விவகாரத்து பற்றி கருத்து சொன்ன குஷ்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments