Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு தீ வைப்போம்: வைகோ ஆவேசம்

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (08:34 IST)
புதிய கல்விக்கொள்கை குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தெருவுக்கு தெரு நாற்சந்தி, முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.
 
நேற்று கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட வைகோ, 'அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தினர் என்றும், அதைபோல் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு நாற்சந்தி முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என்றும் சூளுரைத்தார்.
 
கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திருத்திவிட்டதாக மத்திய அரசு கூறுவதாகவும், ஆனால் அது அப்பட்டமான ஏமாற்று வேலை என்றும், மும்மொழித் திட்டம் என்று அந்த வரைவு அறிக்கையில் இன்னமும் இருப்பதை பார்த்து தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டோம் என்றும் கூறினார்.
 
இந்திய ராணுவத்தின் முன் மார்பை காட்டி உயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை வீண்போகும்படி விட மாட்டோம்' என்றும், திராவிடக் கட்சிகளோடு மோதி பா.ஜ.கவின் மூக்கு உடைபட்டுள்ளது என்றும் வைகோ பேசினார்

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments