Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வைகாசி விசாகம்.. முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்..!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (08:46 IST)
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
உலகம் முழுவதும் முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். இந்த நாளில் பால்குடம் பால்காவடி ஏந்தி பக்தர்கள் செல்வார்கள் என்பதும் பல பக்தர்கள் பாதயாத்திரை சென்று தங்களது நேர்த்டி கடனை நிவர்த்தி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திர தினத்தன்று மயில் மீது ஏறி முருகன் வருவார் என்று பொருள் என்பதால் இந்த தினத்தை முருக பக்தர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். 
 
இந்த நிலையில் இன்று வைகாசி விசாகம் கொண்டாடப்படுவதை அடுத்து தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சென்னை வடபழனி, மதுரை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments