Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா: தேதி அறிவிப்பு..!

Tiruchendhur
, திங்கள், 29 மே 2023 (18:31 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ஜூன் இரண்டாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜூன் ஒன்றாம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் அதன் பின் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூன் இரண்டாம் தேதி வைகாசி விசாகத் திருநாளில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விசுவரூப தீபாரதனை தொடங்கி சாயரட்சை தீபாரதனை வரை மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக கவனிக்கப்பட்டுள்ளன என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்கள் நம்பிய காரியம் நடக்கும்! இன்றைய ராசிபலன் (29-05-2023)!