Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் சாந்தா மறைவு : அரசு மரியாதையுடன் அடக்கம்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:02 IST)
மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவிப்பு. 

 
பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மற்றும் சமூக சேவகியான டாக்டர் சாந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 
 
வாழும் அன்னை தெரசா வாழ்ந்து கொண்டிருந்த சாந்தா அவர்களின் உயிர் இழப்பு மனித குலத்திற்கே பேரிழப்பு என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பழைய அடையார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நீண்ட வரிசையில் அவருடைய உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ, டிடிவி தினகரன் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டெல்லியில் இருக்கும் முதல்வர் பழனிசாமி அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments