Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஊரே வியக்கும் சீர்வரிசை''- நண்பரின் இல்ல விழாவில் சக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (16:16 IST)
மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே  நண்பரின் இல்ல காதணி விழாவுக்காக, சக நண்பர்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். இவரது மனைவி லதா.  இவர்களின் குழந்தைகளுக்கு காதணி விழா வைத்தனர். இதற்காக ஊர் முழுவதும் உள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, அவரது உறவினர்களின் சீர்வரிசையயை மிஞ்சும் வகையில்,  கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வபாண்டி, மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்டோர் தடபுடலாக சீர்வரிசைகளுடன் மேளதாளம், பொய்க்கால் குதிரை ஆகியவற்றுடன் வீட்டிற்கு சென்றனர். மேலும், 500கிலோ கொண்ட ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அத்துடன் ஜல்லிக்கட்டு காளை மற்றும் கிடாய்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments