Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலைக்கு மரியாதை; காவலர்கள் இடமாற்றம்! – உதயநிதி கண்டனம்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (18:00 IST)
கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூரை சேர்ந்த மூன்று காவலர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் “தந்தை பெரியார் தமிழகத்தின் அடையாளம்-அவரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையோடு நடத்தியது முத்தமிழறிஞரின் கழக அரசு. ஆனால், பெரியார் சிலைக்கு மரியாதை செய்த காவலர்களை இடமாற்றம் செய்கிறது அடிமை அரசு. முதுகெலும்பற்ற எடுபிடி புழுக்களுக்கு சுயமரியாதை, மானம் என்றாலே கூச்சம் வந்து விடுகிறது.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments