Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயமரியாதை இழந்த அடிவருடி: யாரை தாக்குகிறார் உதயநிதி?

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (07:09 IST)
நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, திமுக ஒரு கம்பெனி என்றும், வாரிசுகள் மட்டுமே அங்கு தலைமை பொறுப்பை ஏற்க முடியும் என்றும், ஆனால் அதிமுகவில் உழைப்பால் உயர்ந்தவர்கள் பெரிய பதவியை கூட அடைய முடியும் என்றும் காட்டமாக பேசினார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி தனது டுவிட்டரில், 'வரிசையில் தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே! சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளி கூட தகுதி இல்லை' என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். சுயமரியாதை இழந்த அடிவருடி, முதுகெலும்பில்லாத அடிமை என்று உதயநிதி யாரை குறிப்பிட்டார் என்பதை இதிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments