Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்ட செயலாளராகும் உதயநிதிக்கு நெருக்கமானவர்: திமுகவில் பரபரப்பு!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (22:42 IST)
நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து மாபெரும் வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் கிடைக்கும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் எதிர்பார்த்தாராம். ஆனால் கிடைத்த வெற்றி அவர் எதிர்பார்த்ததைவிட பாதியாக இருந்ததால் மாவட்ட செயலாளர்களை சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் அவர்கள் வறுத்தெடுத்துதாக தெரிகிறது
 
அதுமட்டுமின்றி ஒருசில குறிப்பிட்ட மாவட்ட செயலாளர்களை அவர் மாற்றவும் முடிவு செய்திருக்கிறாராம். இந்த நிலையில் திமுக இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் அன்பில் பொய்யாமொழி மகேஷ் அவர்கள் உதயநிதியின் பக்கபலமாக இருந்து வரும் நிலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக இவர் திருச்சி பகுதியில் ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படலாம் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நெருக்கமான ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவியும் கிடைக்க இருப்பதால் திமுகவில் உதயநிதியின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments