மாவட்ட செயலாளராகும் உதயநிதிக்கு நெருக்கமானவர்: திமுகவில் பரபரப்பு!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (22:42 IST)
நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து மாபெரும் வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் கிடைக்கும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் எதிர்பார்த்தாராம். ஆனால் கிடைத்த வெற்றி அவர் எதிர்பார்த்ததைவிட பாதியாக இருந்ததால் மாவட்ட செயலாளர்களை சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் அவர்கள் வறுத்தெடுத்துதாக தெரிகிறது
 
அதுமட்டுமின்றி ஒருசில குறிப்பிட்ட மாவட்ட செயலாளர்களை அவர் மாற்றவும் முடிவு செய்திருக்கிறாராம். இந்த நிலையில் திமுக இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் அன்பில் பொய்யாமொழி மகேஷ் அவர்கள் உதயநிதியின் பக்கபலமாக இருந்து வரும் நிலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக இவர் திருச்சி பகுதியில் ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படலாம் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நெருக்கமான ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவியும் கிடைக்க இருப்பதால் திமுகவில் உதயநிதியின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments