Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அருகே சரிந்து விழுந்த கட்டிட சாரம்: 30 பேர் கதி என்ன?

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (21:09 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மெளலிவாக்கம் அருகே கட்டிடம் ஒன்று சரிந்த விழுந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் மீண்டு வராத நிலையில் சற்றுமுன்னர் சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியில் உள்ள கட்டிடம் ஒன்றின் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்த கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வந்ததாகவும், இரண்டு மாடிகள் கொண்ட இந்த கட்டிட சாரம் சரிந்ததில் அருகில் இருந்த வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப்படையினர் இதுவரை 5 பேர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும், இருப்பினும் இன்னும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments