Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அருகே சரிந்து விழுந்த கட்டிட சாரம்: 30 பேர் கதி என்ன?

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (21:09 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மெளலிவாக்கம் அருகே கட்டிடம் ஒன்று சரிந்த விழுந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் மீண்டு வராத நிலையில் சற்றுமுன்னர் சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியில் உள்ள கட்டிடம் ஒன்றின் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்த கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வந்ததாகவும், இரண்டு மாடிகள் கொண்ட இந்த கட்டிட சாரம் சரிந்ததில் அருகில் இருந்த வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப்படையினர் இதுவரை 5 பேர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும், இருப்பினும் இன்னும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments