Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துகுடியில் பேருந்துகளை இயக்குவது எப்போது? புதிய கலெக்டராக பொறுப்பேற்ற சந்தீப் தகவல்

Webdunia
வியாழன், 24 மே 2018 (19:55 IST)
தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு காரணமாக அம்மாவட்டத்தின் கலெக்டராக இருந்த வெங்கடேஷ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துகுடியின் புதிய கலெக்டராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றுள்ளார். கலெக்டர் பொறுப்பேற்றவுடன் தூத்துகுடி நகரத்தின் நிலவரம் குறித்து அவர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 
தூத்துக்குடியில் அம்மா உணவகம் 24 மணி நேரமும் திறக்க முடிவு. ரேஷன் கடைகள் திறந்துவைக்கவும் உத்தரவு. மேலும் மதுரையில் இருந்து காய்கறிகள் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் 
 
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை. மேலும் ஆலையை மூடும் முன் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
 
தூத்துக்குடியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குவது பற்றி நாளை முடிவு செய்யப்படும்
 
தூத்துகுடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் மற்றும் 83 பேர் காயம் அடைந்துள்ளனர்.
 
தூத்துகுடியில் கடந்த 2 நாட்களில் ரூ.1.27 கோடி மதிப்பிலான வாகனங்கள் சேதம்
 
தூத்துகுடியில் மீண்டும் இயல்பு நிலைமையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்
 
இவ்வாறு தூத்துகுடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments