Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை..! சிபிசிஐடி மனு தள்ளுபடி..!!

Senthil Velan
திங்கள், 12 பிப்ரவரி 2024 (17:50 IST)
வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரிய சி.பி.சி.ஐ.டி.யின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் கோரிக்கை வைத்தன.
 
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது
 
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமானவர்களாக கருதப்பட்ட 31 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை மாதிரிகள், மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்தது.
 
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், அடுத்த கட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர். இதற்காக நீதிமன்ற அனுமதியை கோரி மனு தாக்கல் செய்தனர். 

ALSO READ: திமுகவுடன் பேச்சுவார்த்தை.! 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்.. திருமாவளவன்..!!

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய சிபிசிஐடி போலீசாரின்  மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments