Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைத்தெருவில் வெடித்த ஹீலியம் சிலிண்டர்; உடல் சிதறிய ரவுடி! – திருச்சியில் பெரும் அசம்பாவிதம்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (08:40 IST)
திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பலர் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் கடைத்தெரு பகுதிகளில் குவிந்து வருகின்றனர். திருச்சி சிங்காரத்தோப்பிலும் மக்கள் கூட்டம் நிறைய இருந்த நிலையில் அங்கு ஹீலியம் கேஸ் நிரப்பி பலூன் விற்கும் நபர் ஒருவரும் துணிக்கடை முன்பு பலூன்களை விற்று வந்துள்ளார்.

அப்போது திடீரென ஹீலியம் சிலிண்டர் வெடித்தது. இதனால் அருகே இருந்த ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. அருகே இருந்த துணிக்கடையின் மூன்றாவது தளம் வரை இருந்த கண்ணாடி சுவர்கள் உடைந்துள்ளன. மக்கள் பலர் சிலிண்டர் வெடித்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் மாட்டுரவி என்ற சின்ன தாராபுரத்தை சேர்ந்த ரவுடி சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார். 13 வயது மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் 21 பேர் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹீலியம் பலூன் விற்ற வடமாநில இளைஞரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், திருச்சியில் ஹீலியம் பலூன்கள் விற்க தடை உள்ளதாகவும், அதை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edited By; Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments