Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை உபாதைக்கு சென்ற குழந்தைகள் மாயம்! – சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (13:54 IST)
திருச்சி சமயபுரம் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற குழந்தைகள் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரவிசந்திரன். இவரது மனைவி அனிதா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற 6 வயது பெண் குழந்தையும், நரேன் என்ற 4 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.

பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடும் நிலையில் இரு குழந்தைகளையும் ரவிசந்திரனின் தாய் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இயற்கை உபாதைக்காக பெருவளை வாய்க்கால் கரையோரம் சென்ற இரு குழந்தைகளும் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் குழந்தைகளின் பாட்டி வாய்க்காலுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு குழந்தைகளின் காலணி மட்டும் கிடந்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடம் விரைந்த உதவி ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு முழுவதும் குழந்தைகள் தொடர்ந்து தேடப்பட்டு வந்தனர். அதிகாலை வேளையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments