Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் 5 பேர் உயிரிழப்பு: திருச்சி-சென்னை சாலையில் பயங்கர விபத்து

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:09 IST)
திருச்சி சென்னை சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்து காரணமாக 5 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 
திருச்சி சென்னை சாலை எப்போதும் பிஸியாக இருக்கும் என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அந்த பகுதியில் மிக வேகமாக செல்லும் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் இரண்டு பெண்கள் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஒரு தனியார் பேருந்து இரண்டு லாரிகள் மற்றும் இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் ஒரு சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் வேப்பூர் அருகே இந்த விபத்து நடந்ததாகவும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments