Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து சங்கங்களும் பங்கேற்கின்றன

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (07:43 IST)
காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து சங்கங்களும் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன. 
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
 
இதனையடுத்து இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 15 போக்குவரத்து சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments