Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு..!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (18:00 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரசு பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு பேருந்துகளில் உறுதி தன்மையை கவனிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பேருந்துகளின் மேற்கூரை, படிக்கட்டுகளை கண்காணித்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு பேருந்துகளில் பிரேக், கிளட்ச் உள்ளிட்ட அம்சங்களை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணிமனைகளில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு குறித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த  சில வாரங்களாக அரசு பேருந்துகளில் மழை நீர் கசிவது குறித்த வீடியோ வெளியாகி உள்ளதால் அதை தவிர்க்கும் வகையில்  சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments