Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (09:22 IST)
கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. 
 
குறிப்பாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தறிவு மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
குற்றாலத்தில் சீசன் நன்றாக இருப்பதால் தமிழக மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதித்திருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அருவி அருகிலேயே சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் குளிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹோலி அன்னைக்கு பர்தா போட்டு மூடிக்கோங்க! இஸ்லாமியர்களுக்கு பாஜக பிரபலம் அறிவுரை!

துப்பாக்கியை எடுத்து சுட்ட வளர்ப்பு நாய்.. நாயின் உரிமையாளர் படுகாயம்..!

கோடை விடுமுறை எதிரொலி: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

போர் நிறுத்தத்திற்கு பணிந்த ஜெலன்ஸ்கி! ரஷ்யாவின் ரியாக்‌ஷன் என்ன? - இன்று அமெரிக்கா பேச்சுவார்த்தை!

குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் எப்போது செயல்படும்? இஸ்ரோ தலைவர் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments